பகை ஏதுள?
[2009 December 26 | 14:24]

அலைகள் புரள்
அன்னைக் கடல்
நுரைகள் திரள்
அழகுன் உடல்

மலைபோல் எழ
தலைமேல் விழ
உலகம் அழ
பகை ஏதுள…?

கரையைக் கட
காலில் விழு
கதறிஈ அழு
கண்ணீர் விடு

ஆழம் மிகு
கடலே அறி
வீரம் மிகு
தமிழர் குடி

கோரம் மிகு
கொடுமை இது
கொண்டாய் பலி
கொண்டோம் வலி

எதனால் இது
எமக்கேன் இது
எனநீ ஒரு
பதிலைக் கொடு

அழுகைக் குரல்
அகதிச் சுமை
குருதிக் குளம்
போரின் முகம்

இதுநாள் வரை
இதுதான் நிலை
இழந்தோம் பல
இறந்தோம் பலர்

அலையே குறி
ஓயார் இவர்
படகே றுவர்
வலைவீ சுவர்

கோலத் தமிழ்
கொள்கைக் குரல்
வானின் நிழல்
காற்றின் குழல்

தூறும் மழை
புழுதிஈ மணல்
நிலவின் ஒளி
தாய்மண் மடி

இவையே எம்
உறவான பின்
துயர் சூழுமோ?
உயிர் வாடுமோ?

1] நன்றி: காட்சி - www.google.com
2] அப்பால் தமிழ் இணையத்தளம், 09.04.2005
3] உராய்வு (கவிதைத் தொகுப்பு), 2005

உங்கள் கருத்தையும் பதிவு செய்க